இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆர்.எம்.எஸ் அலுவலகம்

 75 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிய ஆர்எம்எஸ் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகே இந்த அஞ்சல் பிரிப்பு அலுவலகம் இருந்தது.

வடிமதகு சந்து @ அண்டனூர் சுரா

படம்
புதுக்கோட்டை வீதி மட்டுமல்ல, குறுக்குச் சந்துகளும் நேராகவே இருக்கும். ஆனால் இந்த சந்து பாம்பைப் போல வளைந்து நெளிந்து இருக்கிறது. சந்தின் பெயர் வடிமதகு சந்து. சந்தின் இருபுறமும்  நகைக்கடைகளும் அடகுக் கடைகள் இருக்கின்றன. அது என்ன வடிமதகு சந்து என்று அந்த வழியே சென்று பார்த்தால் சந்து பல்லவன் குளத்தில் சென்று முடிகிறது. பல்லவன் குளத்தில் தண்ணீர் நிறைகையில் குளத்திலிருந்து மதகு வழியே தண்ணீர் வெளியேற கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கால்வாய் இன்றும் உள்ளது. அதாவது பாதாளத்தில். அக்கால்வாய்மீது சாலையிட்டு இருபுறமும் கடைகள் உள்ளன.  முன்பு இப்பகுதி குடியிருப்பு பகுதியாக இருந்தது என்று சொல்லும்விதமாக சிலகடைகள்  வீடாகவே இருப்பதைக் கொண்டு அறியமுடிகிறது. இந்தச் சந்து தொடங்கும் மதகு வாயில்தான் ஸ்ரீ சாந்தநாதர் கோவில் உள்ளது. நன்றி - ஒட்டடை பாலச்சந்திரன் 

டி.இ.எல்.சி (TELC)

படம்
புதுக்கோட்டை நகரவாசிகள் மட்டுமல்ல,  நகரத்தைச் சுற்றியுள்ள பலரும் எதோ ஒருவகையில் டிஇஎல்சி உடன் நெருக்கம் கொண்டிருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு கந்தர்வகோட்டை, கரம்பக்குடி, இலுப்பூர், கீரனூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் புதுக்கோட்டை பள்ளியில் படிக்க விரும்பினால் அவர்களது முதல் தேர்வு டி இ எல் சி பள்ளியாகவே இருக்கும்.   டிஇஎல்சி என்பது என்ன? தமிழ் எவாஞ்சலிகல் லுத்தரன் சர்ச் என்பதன் சுருக்கமே டி.இ.எல்.சி. தற்போது இது 'தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை' என்று அழைக்கப்படுகிறது. லுத்தரன் என்பது என்ன? கிறிஸ்தவ மதத்தில் மூடநம்பிக்கைகளும் பிற்போக்கான பரப்புரைகளும் அதிகமானதால் பதினாறாம் நூற்றாண்டில் மார்டின் லுதர் கிறித்தவ மதத்திற்குள் சீர்த்திருத்தத்தை புகுத்தினார். அவரது பரப்பரைக்கு ஆதரவு பெருகியது. அதேநேரம் கிறிஸ்தவ பழைமைவாதிகள் மார்டின் லுதரைப் பின்பற்றுபவர்களை லுத்தரன் என்று கேலி பெயரால் அழைத்தார்கள். அச்சொல்லைக்கொண்டு உருவான கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவே எவாஞ்சலிகல் லுத்தரன். எவாஞ்சலிகல் என்கிற சொல் சுவிசேஷ என்றானது.  இதன் தமிழ்ப்பதம் நற்செய்தி! தரங்கம்பாடியில் அச்...

அக்காச்சியா குளமும் அக்காச்சிப்பட்டியும்

படம்
@ அண்டனூர் சுரா புதுக்கோட்டை சந்தைப்பேட்டை மாட்டுச் சந்தைக்கும் வடக்குப் புறமாக உள்ள குளம் அக்சா குளம் என்கிற பெயரைத் தாங்கி இருக்கிறது. இது குளம் அல்ல, ஓடை. தற்போது குளமாக சுருங்கிப் போயிருக்கிறது. அதாவது அடப்பன் குளத்திற்கும் நேர் தெற்கில் இக்குளம் இருக்கிறது. ஒரு காலத்தில் இக்குளத்தைச் சுற்றிலும் வயற்காடுகள் இருந்திருக்கின்றன. இந்த வயல்களைத் தூர்த்து தெருக்களும் குடியிருப்புகளும் வந்துவிட்டன. ஆகவே இத்தெரு அக்சா வயல் முதல் தெரு, இரண்டாம் தெரு என்கிற பெயரால் அழைக்கப்படுகிறது. இவ்வயற்காட்டுக்குப் பாசன நீர் தந்த குளம் தற்போது  நீர்த்தாமரை,  அல்லி, நாணல், பாசி, கருவைக்காடுகள் மண்டிப்போய் மக்கள் பயன்பாடற்று காட்சியளிக்கிறது.  இக்குளத்தின் கரையில் சமீபகால பிள்ளையார் இருக்கிறது. அது என்னதாம் அக்சா குளம் என்று விசாரிக்கையில் அது அக்சா குளம் அல்ல,  அக்காச்சியா குளம் என்று தெரியவந்தது. புதுக்கோட்டை மன்னர்கள் விஜயநகர அரசின் தொடச்சிகள்.  இவர்கள் தெலுங்கு பேசுபவர்கள். இவர்கள் மாமாவை பாவா என்று அழைப்பார்கள்.  அக்காவை அக்காச்சியா என்றும் அக்கம்மா என்றும் அழைத்தவர்கள்....
  கடியாபட்டி நகரத்தார் விவரங்கள் சென்னை வாழ் கடியாபட்டி நகரத்தார் சங்கம் கடியாபட்டி நகரத்தார் ஊர்களில் 76 ல் புள்ளி கணக்கு வரிசைபடி 7 வது பெரிய ஊர், சுமார் 875 புள்ளிகள் உள்ள கடியாபட்டியில் சுமார் 300 புள்ளிகள் சென்னையில் மட்டுமே வாழ்வது ஒரு தனி சிறப்பு, எப்படி 76 ஊர்களில் 7 வது இடத்தில் இருக்கிறதோ அதே விகிதாச்சார படி சென்னை வாழ் நகரத்தார் சங்கங்களிலும் சசென்னை வாழ் கடியாபட்டி நகரத்தார் சங்கம் 7 வது இடத்திலேயே இருக்கும். கடியாபட்டியில் நகரத்தார்கள் பல ஊர்களில் இருந்து வந்து 18 வது நூற்றாண்டின் துவக்கத்தில் குடியேறி நகரத்தார்களுக்கே உரிய முறையில் மளிகை போல் வீடுகளை கட்டி விஸ்வநாதபுரம், இராமசந்திரபுரம், பழையூர் என்று மூன்று பகுதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். விஸ்வநாதபுரம் பகுதி விஸ்வநாத அய்யர் என்பரிடம் இருந்த நிலங்களை நகரத்தார்கள் விலை கொடுத்து வாங்கி ஒவ்வொரு மனையும் சுமார் 12,000 சதுர அடி மனைகளாக பிரித்து வீடுகளை கட்டினார்கள், சிறிய கோவிலாக இருந்த சிவன் கோவிலை பராமரித்து வந்த விஸ்வநாத அய்யர் கடியாபட்டி நகரத்தார்கள் ஊருக்கு நடுவில் தனியாக சிவன் கோவில் கட்ட இடம் ஒதுக்கி (தற்பொழுது குமு...

புதுக்கோட்டை கோர்ட்

 1952 ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சதி வழக்கு புதுக்கோட்டை கோர்டில் நடைபெற்றது. இந்த வழக்கை மையப்படுத்தி கட்சி புதுக்கோட்டையில் நன்கு வளர்ந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்

படம்
புதுக்கோட்டை பிருந்தாவனம் வடக்கு ராஜ வீதியில் ஒரு நூல் கண்டை உருட்டிவிட்டால் நகர் மன்றம், பழனியப்பா தியேட்டன் முக்கம், திமுக மாவட்ட அலுவலகம் தாண்டி திலகர் திடலில் வந்து நிற்கும். இந்தத் திடலுக்கு முன்னதாக சிவப்புக் கொடியைப் பறக்கவிட்டுக்கொண்டு கம்பீரமாக நிற்கும் அலுவலகம் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு அலுவலகம். ஒரு பக்கம் கட்சியின் சின்னம் கருக்கருவாள் சுத்தியல், இன்னொரு புறம் தேர்தல் சின்னம் கருக்கருவாள் நெற்கதிர்.  வெளியில் ஒரு கொடிக்கம்பம்.  அதில் பறக்கும் கட்சியின்கொடி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925 டிசம்பர் 26 இல் தொடங்கப்பட்ட போதும் புதுக்கோட்டையில் இக்கட்சி தொடங்கப்பட்டது 1946 ஆம் ஆண்டில்தான். புதுக்கோட்டையில் இக்கட்சியைத் தொடங்கியவர்களில் பி. கந்தசாமி,  வி.நாகு, வி.வி.எஸ்.வீராச்சாமி போன்றோர் முக்கியமானவர்கள். இக்கட்சி தொடங்கிய காலத்தில் புதுக்கோட்டை மன்னர் நிர்வாகத்தை எதிர்த்து ஒரு போராட்டத்தை கையிலெடுத்தது. அப்பொழுது மீ.சேதுராமன், எ.எம்.கோபு, சி.கே. வடிவேலு ஆகிய தோழர்கள் இணைந்து மாணவர் மன்றம் என்கிற அமைப்பைத் தொடங்கினார்கள். இந்நேரத்தில் திருவிதாங்கூர் சமஸ்தான த...

பாலன் நகர்

 1986 ஆம் ஆண்டு வீடற்றவர்களுக்கு வீடு கொடுக்க வேண்டும் என அகில இந்திய அளவில் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி முடிவெடுத்தது. இப்பொழுது இப்பகுதியில் தாவூத் மில் இருந்தது. அதையொட்டிய காலி மனையிடத்தில் வீடு கட்டும் போராட்டத்தில் இறங்கினார்கள். கே. ஆர். சுப்பையா, எச். சவரிமுத்து, ஆர்.எம். வீரப்பன், பி. கருப்பையா, மாரிமுத்து ஆகியோர். இவர்களால் உருவாக்கப்பட்ட புதுநகரம் பாலன் நகர். அதாவது பாலதண்டாயுதபாணி நினைவாக. 

காமராஜபுரம்

1970 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட நகர் காமராஜபுரம். ஏழைகளுக்கு வீடு கொடு எனும் போராட்டத்தின் நீட்சியில் இந்த நகர் உருவாக்கப்பட்டது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த கே. ஆர். சுப்பையா, பி.எம்.நடராஜன், ஜி. பாலகிருஷ்ணன், சீ.ராமச்சந்திரன், ப.சண்முகம், பி.குமாரவேல், எஸ்.நாகரெத்தினம், பி. ராமையா ஆகியோர்கள் இந்த நகர் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்கள். 

சந்தைக்கு வரும் மாடுகளை வரவேற்க ஒரு வாயில் @அண்டனூர் சுரா

படம்
  புதுக்கோட்டை நகரம் நேரான வீதிகளை மட்டும் கொண்டதல்ல, சந்தைக்கும் பெயர்போன ஊர்.  சந்தையோடு தொடர்புடைய இரண்டு பேட்டைகள் புதுக்கோட்டையில் உண்டு. ஒன்று வண்டிப்பேட்டை, மற்றொன்று சந்தைப்பேட்டை. வண்டிப்பேட்டை மச்சுவாடியிலும் சந்தைப்பேட்டை நகரத்திற்கு மேற்கிலும் உள்ளன. சந்தைபேட்டையில்தான் மன்னராட்சி காலம் முதல் இன்று வரை  மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது.  புதுக்கோட்டைக்கும் அருகிலுள்ள திருச்சிராப்பள்ளியில் இரண்டு மாட்டுச் சந்தைகள் நடந்திருக்கின்றன. ஒன்று கிழட்டு மாட்டுச் சந்தை, மற்றொன்று உழவு மாட்டுச் சந்தை. இவ்விரு சந்தைகளும் தீண்டாமையின் வடிவங்கள். சாதியின் பெயரால் ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் தான் வளர்க்கும் மாடுகளை கிழட்டு மாட்டுச் சந்தையில்தான் விற்கவும் வாங்கவும் முடியும் என்கிற நிலை இருந்தது. இந்த இரண்டு மாட்டுச் சந்தைகள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதப் பொருளாகி கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில்  இரண்டு பாகுபாட்டுச் சந்தைகள் ஒழிக்கப்பட்டு ஒரே சந்தையானது. இந்த விவாதம் கலைஞர் சட்டப் பேரவை உரையில் இடம்பெற்றுள்ளது. இப்படி திருச்சியில் இர...

வண்டிப்பேட்டை @ அண்டனூர் சுரா

படம்
புதுக்கோட்டையில் இரண்டு பேட்டைகள் உள்ளன. ஒன்று சந்தைப்பேட்டை.  மற்றொன்று வண்டிப்பேட்டை. சந்தைப்பேட்டை குறித்து இன்னொரு பதிவில் பார்ப்போம்.  புதுக்கோட்டையில் வண்டிப்பேட்டை எங்கே இருக்கிறது? ஒரு வீட்டின் அடுப்பை வைத்து கிழக்கு மேற்கு திசைகளைக் கண்டு சொல்லிவிட முடியும். அதேபோன்று நகரத்தில் அமைந்துள்ள வண்டிப்பேட்டையைக் கொண்டு நகரத்தின் தலைவாயிலைச் சொல்லிவிடலாம். புதுக்கோட்டை நகரம் ஐந்து வாயில்களைக் கொண்டது. இவற்றில் முகப்பு வாயில் எது? ஒரு நகரத்தில் வண்டிப்பேட்டை எந்தத் திசையில் உள்ளதோ அதுவே முன்வாயில்.  தஞ்சாவூரில் வண்டிப்பேட்டை கிழக்கு வாசலில் உள்ளது. ஆகவே தஞ்சாவூர் நகரத்தின் முகப்பு வாசல் கிழக்கு. காவிரி பாயும் திசை அது. புதுக்கோட்டையில்  வண்டிப்பேட்டை நகரத்திற்கும்  வடக்கில் அமையப்பெற்றுள்ளது. அப்படியென்றால் புதுக்கோட்டை நகரம் வடக்குத் திசை கொண்டது. தஞ்சாவூர் சாலையில் மச்சுவாடி கடந்து ஜீவா நகர் வந்தடைகையில்  இடது புறம் செல்லும் குறுகலான சாலை காட்டுநாயக்கன் தெரு. அந்தத் திருப்பமே வண்டிப்பேட்டை. இன்று ஜீவா நகர் என்கிற பெயரால் அழைக்கப்படும் பேருந்து நிறுத்தம்...