இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சத்தியமூர்த்தி சாலையும் புதிய பேருந்து நிலையமும் @அண்டனூர் சுரா

படம்
  புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் 26.04.1966 அன்று நாட்டப்பட்டது. அன்றைய உணவுத் துறை அமைச்சரும் புதுக்கோட்டைக்கு உட்பட்ட திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. வெ. இராமையா அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்தச் செய்தி அடங்கிய கல்வெட்டு புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. பிறகு புதிய பேருந்து நிலையம் 19.04.1981 அன்று கட்டித் திறக்கப்பட்டது. இந்தத் திறப்பு விழாவிற்கு அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ப. குழந்தைவேலு அவர்கள் தலைமை வகிக்க, செய்தி, அறநிலையத் துறை அமைச்சர் திரு. இராம. வீரப்பன் அவர்கள் பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு பெருந்தொழிற்துறை அமைச்சர் திரு. எஸ். திருநாவுக்கரசு அவர்கள் முன்னிலை வகித்தார்கள். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தவர் திரு.எஸ்.டி காசிராஜன் அவர்கள். நகராட்சி ஆணையர் இரா.வேலு பி.ஏ. இக்கட்டடத்தின் பொறியாளர் திரு. கே. பாலசுப்பிரமணியன். தலைமைக் கொத்தனார் திரு.மு. பழனியப்பன். இந்தக் கல்வெட்டில் தலைமைக் கொத்தனாரின் பெயர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பேரு...

எழில் நினைவமைப்பு @அண்டனூர் சுரா

படம்
ஒரு மாவட்டம் உதயமாகையில் அதன் நினைவாக ஓர் அடையாளம் நிறுவப்படுவது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டம் 14.01.1974 அன்று தோற்றுவிக்கப்பட்டது.  இந்நாளை நினைவு கூறும் வகையில் புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் ஒரு நினைவுதூண் நிறுவப்பட்டுள்ளது.  சுதந்திர போராட்ட வீரர்களுக்கான நினைவுதூண் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த தூணில் இரண்டு கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. ஒன்றில் எழில் நினைவமைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டு ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் தோற்றம் திருவள்ளுவராண்டு  2005 தைத்திங்கள் முதல் நாள் 14.01.1974 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் மு. கருணாநிதி அவர்களால் 20 01.1974 அன்று துவக்கி வைக்கப்பட்டது. கல்வெட்டு இரண்டு புதுக்கோட்டை மாவட்டம் தோற்ற எழில் நினைவமைப்பு. தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி அவர்களால் 08.06.1975 அன்று திறந்துவைக்கப்பட்டது .

இரட்டைக் குளம் சந்து

படம்
  புதுக்கோட்டை என்பது குளமும் குளம் சார்ந்த நிலப்பகுதி கொண்ட  ஊராகும். புதுக்கோட்டை நகரம் என்பதே பல குளங்களைத் தூர்த்து எழுப்பப்பட்ட நகரம்தானே! புதுக்கோட்டை திருவேள்பூரிலிருந்து (திருவப்பூர்) மலையடி கருப்பர் கோவில் செல்லும் வழியில் இடது புறம் குறுகிய சந்து செல்கிறது. இந்தச் சந்துக்கு இரட்டை குளம் சந்து என்று பெயர். அது என்ன இரட்டை குளம், என்று உள்ளே சென்று பார்த்தால் குறுகிய சந்தின் இருபுறமும் இரண்டு குளங்கள் இருக்கின்றன. குளம் என்றால் மண் தரையை வெட்டியோ,  குளிர்ப்பதற்காக அல்லது விவசாயத்திற்காக வெட்டப்பட்ட குளம் அல்ல. குண்டு வைத்து பாறையை உடைத்து எடுக்கப்பட்ட பள்ளத்தில் நீர் நிரம்பப்பெற்ற குளங்கள். குளம் என்பதே நீர் நிரம்பப்பெற்ற பள்ளம்தானே. குளம் ஒழுங்கற்று இருந்ததால் பார்க்க பயமாக இருந்தது. நீர் வேறு கருப்பாக இருந்தது. குளிக்கலாம். நீந்திச் சென்று மறுகரையைத் தொட்டு திரும்ப முடியாது. குளத்திற்குள் பாறையின் கூர்ப்பு எங்கேயும் இருக்கும். இரட்டை நகரம், இரட்டை காப்பியம், இரட்டைக் கோபுரம் போன்று இரட்டை குளங்கள்.  இரட்டைகுளம் சந்து வித்தியாசமான ஒரு தெருதான்!  இக்குளத...

புதுக்கோட்டை பேருந்து நிலையம் @ அண்டனூர் சுரா

படம்
  தமிழ்நாட்டிலுள்ள பேருந்து நிலையங்களில் நன்கு திட்டமிடப்பட்ட  பேருந்து நிலையமாக புதுக்கோட்டை பேருந்து நிலையம் திகழ்கிறது. காரணம் இந்த நிலையம் 'ப' வடிவிலும் பேருந்துகள் நெரிசலில்லாமல் எளிதாக உள்ளே நுழைந்து வெளியேறும்படியாகவும் உள்ளது. புதுக்கோட்டை நகராட்சிக்கென்று ஒரு பரந்த பேருந்து நிலையம் இல்லாத நிலை  இருந்தது. பழைய பஸ் ஸ்டாண்ட் என்று சொல்லப்படுகின்ற பழைய பேருந்து நிலையம் பேருந்து நிறுத்தம் (bus stop) என்கிற அளவிலேயே இருந்தது. மதுரை, சிவகங்கை, அறந்தாங்கி பேருந்துகள் வந்து திரும்ப அந்த நிறுத்தம் உகந்த இடமாகவும் திருச்சி, தஞ்சாவூர், மணப்பாறை பேருந்துகள் நகர வீதிகள் வழியே நுழைந்து அந்த இடத்திற்கு வந்தாக வேண்டிய நிலையும் இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆகவே வேறொரு இடத்தில் விசாலமான பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கான இடம் தேடுகையில் நகரத்திற்கு தென்மேற்கில் பரந்த நீர்நிலையைக் கொண்ட காட்டுப்புதுக்குளம் உகந்த இடமாக தேர்வு செய்யப்பட்டது.  மழைக்காலத்தில் பெரும் தெப்பமாகவும் கோடை காலத்தில் கால்நடைகளின் மேய்ச்சல் காடாகவும் இந்த இடம் இருந்தது....

புதுக்கோட்டையின் முதல் வங்கி @ அண்டனூர் சுரா

படம்
புதுக்கோட்டை கீழராஜ வீதியில் புதுக்கோட்டை கூட்டுறவு நகர வங்கி எனும் பெயரில் ஒரு வங்கி இயங்குகிறது. இந்த வங்கி நகர வங்கி (TOWN BANK)எனும் பெயரால் தொடங்கப்பட்டது.  இந்த வங்கியே புதுக்கோட்டையின் முதல் வங்கியாகும் . பிரிட்டிஷ் இந்திய சட்டம் -10/1904 இன்படி முக்கிய நகரங்களில் கூட்டுறவு வங்கி தொடங்க அனுமதியளித்தது.  இச்சட்டத்தை ஏற்று புதுக்கோட்டை சமஸ்தானம்  1908 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கம் அமைத்தது. இதன்படி முதல் கூட்டுறவு சங்கம்  கரம்பக்குடியில் தொடங்கப்பட்டது. அடுத்து 1909 ஆம் ஆண்டு ஆலங்குடியிலும் அதே ஆண்டு புதுக்கோட்டை நகரில் பிரகதம்பாள் பெயரில் ஒரு கூட்டுறவு சங்கமும் தொடங்கப்பட்டன .  இந்த சங்கங்களின் வரவு செலவுக்காக தொடங்கப்பட்ட  வங்கி இது, நகர வங்கி (TOWN BANK). மே, 1910 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி 1921 ஆம் ஆண்டு வரை வாடகை கட்டடத்தில் இயங்கியது. பிறகு கிழக்கு இரண்டாம் வீதியில் சொந்த கட்டடத்திற்கு மாறியது . 1925 ஆம் ஆண்டு கீழ ராஜ வீதிக்கு அதாவது நேர் முன்புறம் மாற்றப்பட்டது. இந்த வங்கி தற்போது மிக நீளமான கட்டடத்தைக் கொண்டிருக்கிறது. கீழராஜ வீதியிலிருந்...

புதுக்கோட்டை முன் மாதிரிப் பள்ளி @ அண்டனூர் சுரா

படம்
‘மாநிலத்தில் பூத்த சில மலர்கள் மாலையாகி மணம் ததும்பும் தமிழ்நாடு’ எனும் வாசகத்துடன் பெருமையுடன் இயங்கிய பள்ளி மாடல் ஸ்கூல் என்று அழைக்கப்படும் புதுக்கோட்டை அரசு முன்மாதிரிப் பள்ளி. 1980 - 90 ஆம் ஆண்டுகளில் புதுக்கோட்டை அரசு முன்மாதிரிப் பள்ளிக்குள் நுழைந்தால் மேற்கண்ட வாசகம் மாணவர்களை வரவேற்கும். இப்பள்ளிக்குள் மாணவர்கள் நுழைவது அவ்வளவு எளிதான ஒன்றாக இருந்ததில்லை. தமிழ்நாட்டில் இரண்டு முன்மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆண்களுக்கான பள்ளி புதுக்கோட்டை மச்சுவாடியிலும் பெண்களுக்கான பள்ளி சென்னை சைதாப்பேட்டையிலும் தொடங்கப்பட்டன. புதுக்கோட்டை முன்மாதிரிப் பள்ளி 04.09.1972 அன்று உயர்நிலைப் பள்ளியாக தொடங்கப்பட்டது. இப்பள்ளி பிறகு 1978 ஆம் ஆண்டு மேனிலைப் பள்ளியாக  உயர்த்தப்பட்டது. இதன்பிறகு இப்பள்ளிக்குள் மாணவர்கள் நுழைவதும் இப்பள்ளியில் இடம் கிடைப்பதும் பெருமைக்குரியதாகவும் சவாலானதாகவும் மாறியது. பள்ளியோடு விடுதியும் இணைந்திருந்த ஒரே ஆண்கள் பயிலும் பள்ளி இதுவாகும். இப்பள்ளிக்காக  தமிழக வனத்துறை முப்பது ஏக்கர் இடம் வழங்கியது. மாநிலத்தில் பூத்த சில மலர்கள் மாலையாகி மணம் ததும்பும் தமி...