எழில் நினைவமைப்பு @அண்டனூர் சுரா
ஒரு மாவட்டம் உதயமாகையில் அதன் நினைவாக ஓர் அடையாளம் நிறுவப்படுவது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டம் 14.01.1974 அன்று தோற்றுவிக்கப்பட்டது. இந்நாளை நினைவு கூறும் வகையில் புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் ஒரு நினைவுதூண் நிறுவப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களுக்கான நினைவுதூண் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த தூணில் இரண்டு கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. ஒன்றில் எழில் நினைவமைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டு ஒன்று
புதுக்கோட்டை மாவட்டம் தோற்றம் திருவள்ளுவராண்டு 2005 தைத்திங்கள் முதல் நாள் 14.01.1974
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
டாக்டர் மு. கருணாநிதி அவர்களால் 20
01.1974 அன்று துவக்கி வைக்கப்பட்டது.
கல்வெட்டு இரண்டு
புதுக்கோட்டை மாவட்டம் தோற்ற எழில் நினைவமைப்பு. தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி அவர்களால் 08.06.1975 அன்று திறந்துவைக்கப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக