இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ராமச்சந்திரபுரம் அக்ரஹாரம் @அண்டனூர் சுரா

படம்
புதுக்கோட்டை மச்சுவாடி, ஜீவா நகர் தாண்டி நகரத்திற்குள் நுழைந்தால் இடது புறம் திரும்பும் குறுகலான வீதி ஒத்தத்தெரு.  இதற்கும் அடுத்த தெரு ராமச்சந்திரபுரம் அக்ரஹாரம். புதுக்கோட்டையில் அக்ரஹாரக் குடியிருப்புகள் நிறைய உள்ளன. இவற்றில் விஜயரகுநாதபுரம் அக்ரஹாரம்,  பிரசன்னா ரகுநாதபுரம் அக்ரஹாரம்,  ராமச்சந்திரபுரம் அக்ரஹாரம் ஆகியவை வரலாறுகளைக் கொண்டிருக்கின்றன. புதுக்கோட்டை சமஸ்தான மன்னராக ராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் அவர்கள் 1825 - 1839 இடைப்பட்ட காலத்தில் இருந்தார். இவருக்கும் முன்பு ஆட்சியிலிருந்தவர் ராஜா விஜயரகுநாத தொண்டைமான். இவர் வயோதிக்கத்தால் இறந்துவிட இவருக்கு ஆண் வாரிசு இல்லாமல் இவரது தம்பி ராஜா ரகுநாத தொண்டைமான் மன்னரானார். இவர் இறந்த அண்ணனின் பெயரை நிலைநிறுத்தும் பொருட்டு இறந்த மன்னரின் நினைவாக இரண்டு அக்ரஹாரங்கள் உருவாக்கினார். புதுக்கோட்டை நகருக்கும் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் ஒரே அளவுகள் கொண்ட இருபது வீடுகள் கட்டி அதற்கு விஜயரகுநாதபுரம் அக்ரஹாரம் என்று பெயர் சூட்டினார். பிறகு தனது பெயரும் காலத்தில் நிலைத்து நிற்கும்படியாக கடையக்குடி அக்ரஹாரத்திற்கும் எதிரே வெள்ளா...

கொட்டகைக்காரத் தெரு @ அண்டனூர் சுரா

படம்
புதுக்கோட்டை நகரம் மச்சுவாடி - ஜீவா நகர் இரண்டிற்குமிடையில்  இடது புறம் செல்லும் குறுகிய சாலை கொட்டகைக்காரத் தெரு ஆகும். தெருவின் பெயருக்கேற்ப சாலையின் ஒரு புறம் அடுக்கடுக்காக மரங்களும் ப்ளெக்ஸ் ஒட்டிவைக்கும் சட்டங்களும் சாய்த்து வைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை நகரத்தை கட்டமைத்து விரிவாக்கம் செய்கையில்  நகரத்திற்குள்ளும் வெளியிலும் கூரை வீடுகளும் கூரைக் கடைகளும் அதிகமிருந்தன.  இவை மழையால், புயலால் சேதாரம் அடைகையில் அவற்றை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டிய தேவை இருந்தது.  கொட்டகை போடுவதையும் கூரைகள் மேய்வதையும் தொழிலாகக் கொண்ட பல குடும்பங்கள் நகரைச் சுற்றிலும் குடியிருந்தார்கள். இவர்கள் ஒருசேர குடியேறிய இடம் கொட்டகைக்காரத் தெரு. ஒரு காலத்தில் புதுக்கோட்டை நகரைச் சுற்றிலும் நடைபெறு‌ம் ஊர்த் திருவிழாவிற்குச் சினிமா கொட்டகை, நாடகக் கொட்டகை இவர்களே அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். ஊர்த் திருவிழா இரவு நேர நாடகங்களில் நடிக்க வரும் நாடக நடிகைகள் புதுக்கோட்டை கொட்டகைக்காரங்கள வச்சி மேடை அமைக்கணும் என்பதை ஒரு நிபந்தனையாக விதித்திருக்கிறார்கள். அந்தளவிற்கு உறுதியான மேடை, பந்தல், கொட்...

ஒத்தத்தெரு @அண்டனூர் சுரா

படம்
கந்தர்வகோட்டை ஒன்றியம் நெப்புகை கிராமப் பஞ்சாயத்திற்குட்பட்டு ஒத்தவீடு என்றொரு குடியிருப்பு பகுதி உள்ளது. ஒரு காலத்தில் இக்குடியிருப்பு ஒத்த வீடாக இருந்ததால் அதற்கு அப்படியொரு பெயர். தற்போது பல வீடுகள் கொண்ட குடியிருப்பாக மாறிவிட்டது. இந்த ஒத்த வீட்டுடன் புதுக்கோட்டை ஒத்தத்தெருவை ஒப்பிட்டுப் பார்த்தேன். ஒத்தத்தெருவுக்கான பெயர்க்காரணம் வேறொன்றாக இருந்தது. ஒத்தத்தெரு புதுக்கோட்டை மச்சுவாடி, ஜீவா நகர் கடந்து நகரத்திற்குள் நுழைகையில் இடது பக்கம் செல்லும் குறுகிய தெருவுக்கு ஒத்தத்தெரு என்று பெயர். இத்தெருவுக்கும் அடுத்தத் தெரு ராமச்சந்திரபுரம் அக்ரஹாரம். இத்தெருவையொத்த தெருவாக இத்தெரு இருக்குமோ என்றும் தனி ஒரு தெரு என்பதால் ஒத்தத் தெரு என்று பெயரோ என்று  நினைத்தேன். ஒத்தத் தெருவுக்குள் நுழைந்து சாலையின் இருபக்க குடியிருப்புகளையும் பார்க்கையில் புதுக்கோட்டை நகர வீதி, தெருக்களில் சற்றே மாறுபட்ட தெருவாக இத்தெரு இருந்தது.  ஆமாம், இத்தெருவில் ஒரு பக்கம் மட்டுமே வீடுகள் உள்ளன. அதாவது முதன்மை சாலையிலிருந்து கிழக்கு மேற்காக செல்லும் சாலையில் சாலைக்கு வடபுறம் மட்டும் வீடுகள் உள்ளன. சாலைக்கு...