இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலக நவீன நகரங்களில் ஒன்றாக புதுக்கோட்டை

படம்
 @அண்டனூர் சுரா வால்டர் ஹாமில்டன் எனும் நில வரையியல் ஆங்கிலேய ஆய்வாளர் பிரிட்டிஷார் தன் ஆளுகையின்கீழ் வைத்திருந்த அனைத்து நாடுகளுக்கும் சென்று அந்நாட்டிலுள்ள நகரங்களையும் அந்நாட்டு மக்கள் வாழ்நிலைகளையும் பதிவு செய்து இரு பெரும் தொகுதிகளாக நூல் வெளியிட்டார். இந்நூல் 1815 ஆம் ஆண்டு முதல் பதிப்பாகவும் 1828 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாகவும் வெளிவந்தது. EAST – INDIA GAZETTEER CONTANING PARTICULAT DESCRIPTIONS OF THE EMPIRES, KINGDOM, PRICIPALITIES, PROVINCES, CITES, TOWNS, DISTRICTS, FORTRESSES, HARBOURS, RIVERS , LAKES & C, OF HINDOSTAN AND THE ADJACENT COUNTRIES INDIA BEYONR THE GANGES AND THE EASTERN ARCHIPELAGO ; TOCFTHER WITH SKETCHES OF THE MANNERS, CUSTOMS, INSTITUTIONS, AGRICULTURE, COMMERCE, MANUFACTURES, REVENUES, POPULATIONS, CASTES, RELIGION, HISTORY, & C OF THEIR VARIOUS INHABITANTS. இந்நூல் கிழக்கிந்திய கம்பெனியின்கீழ் இந்துஸ்தான் பரப்பிற்குள் இயங்கிய பேரரசுகள், அரசுகள், மன்னர்கள், மாகாணங்கள், பெருநகரங்கள், நகரங்கள், மாவட்டங்கள், கோட்டைகள், துறைமுகங்கள், ஆற...

பேரறிஞர் அண்ணா சிலை புதுக்கோட்டை கீழராஜ வீதியில் நிறுவப்பட காரணம் என்ன?

படம்
 @ அண்டனூர் சுரா அண்ணல் அம்பேத்கர், மகாத்மா காந்தியடிகள் இரு தலைவர்களுக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் அதிகமான சிலை ஒருவருக்கு  நிறுவப்பட்டுள்ளது என்றால் அது பேரறிஞர் அண்ணாவிற்குத்தான். அண்ணா சிலை அண்ணல் அம்பேத்கர் சிலை அளவிற்குப் பரபரப்பும் பதட்டமும் கொண்டதல்ல.  ஒன்று குனிந்த தலை நிமிராமல் கையில் ஒரு புத்தகம் வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருப்பார். இல்லையேல் ஏதேனும் ஒரு சதுக்கத்தில் அல்லது ஒரு வட்டமான போக்குவரத்து வழிச் சாலையின் மையத்தில்  ஏதேனும் ஒரு திசையை விரல்நீட்டியவராய் நின்றுகொண்டிருப்பார். அண்ணா சிலை என்பது இந்த இரண்டில் ஒன்றாகவே இருக்கும். புதுக்கோட்டையின் முதல் சிலை புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் தொடங்கி கீழ ராஜ வீதி வரை  அடுத்தடுத்து நிறைய சிலைகள் உள்ளன. புதுக்கோட்டையில் நிறுவப்பட்டுள்ள முதல் சிலை மன்னர் மார்த்தாண்ட பைரவர் தொண்டைமானுக்கு நிறுவப்பட்ட சிலையாகும். இச்சிலை நீதிமன்ற வளாகத்தின் முகப்பில் நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை குறித்து வேறொரு பதிவில் விரிவாக பார்ப்போம். இதே நீதிமன்ற வளாகத்திற்குள் மேலும் இரண்டு தலைவர்களின் சிலைகள் உள்ளன. ஒன்று தீரர் ச...